Sunday, May 7, 2017

நேற்றைய பெங்களுரு சம்பவம், எத்தன ட்விஸ்டு?

சாய்ராம்ன்னு ஒரு தனியார் நிறுவன மேனேஜரும் அவர் சம்சாரம் அம்சவேணியும் குடிகாரர்களாம், நேத்து நைட் புல்லா போதையை போட்டுட்டு அம்சவேணிக்கா (கொஞ்சம் கம்மியா குடிச்சிருக்கும் போல)  காரை ஓட்டிட்டு வந்திருக்கு. (புருஷன் பேரு சாய்ராம் என்பதை....)

வர வழியில எதுக்கோ பயங்கர சண்டை வர, அம்சவேணிக்கா மூஞ்சி மேல எவ்ளோ நாள் காண்டோ தெரியல, சாய்ராம் துப்பாக்கியை எடுத்து  மூஞ்சி மேலயே அடிச்சிருக்கார்.
 மூக்குல ரத்தம் வர பத்ரகாளி மாதிரி திரும்பின நம்ம வேணிக்கா, க்ரீச்ன்னு வண்டிய பிரேக் போட்டு நிருத்தீட்டு, ராமர் கிட்ட இருந்த துப்பாக்கிய பிடுங்கி கண்டபடி சுட ஆரம்பிச்சிருச்சு. சாய் கதவை திறந்துட்டு ஓட ஓட வெறித்தனமா விரட்டி விரட்டி சுட்ருக்கு, அதுல ஒரு குண்டு வயிற்றுல பட்ருச்சு.
  அண்ணா ஒரு பஸ் வர அதை நிறுத்தி ஓடிப்போய் உள்ள ஏற, பின்னாடியே வந்த அம்சாக்கா அந்த பஸ் ட்ரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி வண்டிய நிறுத்திருக்கு.
 அதுக்குள்ளே பஸ்க்கு உள்ள இருந்த யாரோ ஒரு புண்ணியவான் போலீஸ்க்கு போன் பண்ணி சொல்ல, போலீஸ் அங்க வந்து சாய்ராமை ஹாஸ்பிட்டல விட்டுட்டு, அக்காவை அரெஸ்ட் பண்ணியும் கூட்டிட்டு போய்ட்டாங்க.

 ஸ்டேஷன் போன அக்கா சரக்கு வாங்கி தரசொல்லி போலிஸ்கிட்ட செம்ம பிரச்சனை பண்ணிருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு போதை தெளிஞ்ச பின்னாடி, "அய்யோ.... என் சாயிராம் வலி தாங்க மாட்டானே, நான் கெளம்பறேன், என்னை விடுங்கோ"ன்னு அழுதுகிட்டே இருந்துச்சாம்.

இத்தனை ட்விஸ்ட் கதைல கூட வராதுல்ல?

No comments:

Post a Comment