Saturday, May 6, 2017

இரண்டு வரிகளில் நான்கு திகில் கதைகள்

"வெளியே யார் இப்படி கதவை தட்டுவது?", என ஹாலில் டிவி பார்த்தபடி கோபமாக கேட்டான் அருண், ஜன்னல் வெளியே பார்த்த ஜமுனா அலறினாள், அங்கே கதவை தட்டியபடி கோபமாக, அச்சு அசலாக அதே போலொரு அருண் நின்றிருந்தான்
-----------------------------------------------------------------------------------

பேய்களை கண்டெல்லாம் பயப்பட தேவையில்லை, எதுவும் செய்யாது, நேராக, இடது வலதாக, சில சமயம் கட்டிலுக்கு அடியில் கூட இருக்கும். ஆனால் அவை தலைக்கு மேல் இருக்கும் சமயங்களில் பார்க்காதே உன்னை கொல்லாமல் விடாது
-----------------------------------------------------------------------------------

எங்கிருந்து "டொக் டொக்", என்ற சப்தம் வருகிறதென்றே தெரியவில்லை, அறையின் எல்லா பகுதிகளிலும் சோதித்து விட்டேன், ஆஆ... அது முகம் பார்க்கும் கண்ணாடிக்குள் இருந்து தட்டிக்கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
இரவு நிலா வெளிச்சத்தில் நடப்பது சுகமாக இருந்தது, என் கருப்பு நிழல் வெள்ளை நிறமாக மாறாத வரை
-----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment