Wednesday, February 1, 2017

செங்"குட்டுவன்"

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் செங்குட்டுவன் என்ற விவசாயி போட்ட கணக்கில் மாவட்ட ஆட்சியருக்கு தலைசுற்றியது. இதையடுத்து அவரால் பதில் எதுவும் பேசமுடியாமல், சிரித்து மழுப்பி விவசாயியிடமிருந்து தப்பிச் சென்றார்.
விவசாயின் பட்டியல்
1970 ஆண்டுகளில்..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.150
பேங்க் மானேஜர் - ரூ.250
ஆசிரியர் சம்பளம் - ரூ..90
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.40
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.90
ஆனால் இன்று..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.55,000
பேங்க் மானேஜர் - ரூ.66,000
ஆசிரியர் சம்பளம் - ரூ.39,000
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.880
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.2850
மத்திய அரசு 7-வது ஊதியக்குழு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு இந்த விகிதாச்சார அடிப்படையில் கரும்பு டன்னுக்கு ரூ.39 ஆயிரமும், 60 கிலோ நெல் மூடைக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று விவசாயி செங்குட்டுவன் வலியுறுத்தினார். இல்லையெனில், கரும்பு ஆலையில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்று யோசனையையும் மாவட்ட ஆட்சியரிடம் முன்மொழிந்தார்.
Karuna Murthy fb

No comments:

Post a Comment