Wednesday, January 4, 2017

சம்பவம்

துடியலூர் அருகே ஒரு ஆவின் பூத்தில் டீ குடிப்பதற்காக நின்றிருந்தேன், ஒரு போலீஸ் ஜீப்பில் இரண்டு போலீஸ்காரர்கள் அமர்ந்து கொண்டு, அதில் ஒருவர் அதட்டும் குரலில் "டீ போடுய்யா", என்றார்,

கடைக்காரர் என்னை மறந்துவிட்டு வேகமாக அவர்களுக்கு டீ போட்டு ஓடி சென்று கொடுத்தார், "சாரி சார்", என்று என்னை பார்த்து சிரித்துவிட்டு எனக்கும் அவசரமாக போட்டு கொடுத்தார், நான் போலீஸ்காரர்களை பார்த்தேன், அவர்களும் என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டது போல் தெரிந்தது.

காசை கொடுக்க பர்ஸ் எடுப்பதற்குள், ஒரு போலீஸ் வேகமாக இறங்கி வந்து டீக்கான காசை கொடுத்தார், கடைக்காரர் தலையை சொறிந்துகொண்டே "வேண்டாம்", என்றார், "குடுக்கலேன்னாலும் கேட்டு வாங்கனும்யா" என்றார் அதே அதட்டும் குரலில், போலீஸ் பற்றிய என் பிம்பம் உடைய ஆரம்பிக்கையில், "உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?"என்றதற்கு, "உங்கள மாதிரி காசு கொடுத்து டீ குடிக்கும் சாதாரணன்தான் நானும்" என்றேன்...

இருவரிடமும் ஏனோ மெல்லிய சிரிப்பு மலர்ந்தது.

No comments:

Post a Comment