Sunday, June 5, 2016

ஆசாரி வறுவல் செய்வது எப்படி?

சுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா?

தேவையானவை
சிக்கன் : அரை கிலோ (மிக சிறிதாக வெட்டப்பட்டது)
வர மிளகாய் : 25 (மிக சிறிதாக நறுக்க வேண்டும், விதைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்)
தேங்காய் நீளமாக நறுக்கியது : 10  
சிறிய வெங்காயம் :10
சிக்கன் மசாலா : 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை : பத்து இலைகள்
எண்ணெய், உப்பு, தண்ணீர்

செய்முறை

எண்ணெய் காய்ந்ததும், முதலில் மிளகாயை போட்டு நன்கு வதக்க வேண்டும், பின்னர் கறிவேப்பில்லை, வெங்காயம் கலந்து அது நன்கு வறுபடும் வரை  கரண்டியை வைத்து கிளறவும். சிக்கனை போட்டு, அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும், சிக்கன் மசாலா சேர்க்கவும். நன்றாக கலந்த பின் சிக்கன் அளவிருக்கு தண்ணீர் ஊற்றி பதினைந்து நிமிடம் மூடி விடவும், தண்ணீர் வற்றும் முன் நன்கு கலக்கவும். சிக்கனை வெந்து விட்டதா என சுவை பார்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். மதிய உணவுக்கு சுவையான  அசைவ வறுவல் ரெடி.  

No comments:

Post a Comment