Monday, June 20, 2016

உண்மை கதை

"நாம பிரேக் அப் பண்ணிக்கலாம் சந்தோஷ், எனக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கும்னு தோணல" என்றாள் நந்தினி.
சந்தோஷிற்க்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே வெளிநாட்டு இந்திய  நிறுவனத்தில் இருவரும் பணி புரிகிறார்கள், அரைலட்சத்தை தொடுமளவு சந்தோஷிற்க்கு சம்பளம், நந்தினிதான் முதலில் அவனை விரும்புவதாக தன் காதலை தெரிவித்தாள், சந்தோஷ் மகிழ்ச்சியாகவே இருந்தான், ஏறக்குறைய தன் மனைவியாகவே அவளை நடத்தினான், கடந்த வாரம் கூட அவளின் பிறந்த நாளென்று இன்ப அதிர்ச்சியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு i phone கூட வாங்கி கொடுத்திருந்தான். இவன் வீட்டிலும் எந்த தடையும் இல்லை, நந்தினி தரப்பில் சரியென்று சொன்னால் அடுத்த முகூர்த்ததில் திருமணம் கூட முடிந்து விடும்.

  இந்த சமயத்தில் அவள் இவ்வாறு கூறியது கடும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. பலவிதமாய் யோசித்தும் தன் தரப்பில் எந்த தவறும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவன் யாரையும் அதிகமாக தொந்தரவு செய்து பழக்கம் இல்லாதவன், காத்திருக்கலாம் என முடிவு செய்து அவளை விட்டு சற்றே விலகி இருந்தான். திடீரென்று 15 நாள் விடுப்பில் நந்தினி இவனிடம் சொல்லாமல் சென்று விட்டாள்.

ஒரு வாரம் சென்ற நிலையில் நந்தினியின் அப்பா, அலுவலகத்திற்கு  சந்தோஷை பார்க்க வந்திருந்தார். "என் பொண்ணு தெரியாமல் தப்பு பண்ணிட்டா, உங்களை காதலிக்கிறேன்னு நிக்கிறா, அவளுக்கு எங்க சொந்ததுலையே மாப்பிள்ளை இருக்கு, தயவு செஞ்சு அவ தெரியாம தப்பை மன்னிச்சு நீங்க அவளை மறந்திறனும்" என்று கெஞ்ச ஆரம்பித்தார்.


ஒரு வாரம் அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது, என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இதை வீட்டில் சொன்னவுடன் அவர்கள் உறவினர் ஒருவரின் பெண்ணை இவனுக்கு திருமணம் உடனடியாக முடிக்க பேச சொல்வதாக கூற, சந்தொஷிற்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

 சமகால நந்தினியின் பிளாஷ்பேக்
    நந்தினியின் காதல் வீட்டிக்கு முதலில் தெரியாததால் அவளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தார்கள் அவள் வீட்டில், ஒரு ஆஸ்திரேலிய மாப்பிள்ளை ஜாதகம் பொருந்தி வந்தது, மாப்பிள்ளை அழகாக வேறு இருந்தார். அவர்கள் குடும்பம், சந்தொஷ் குடும்பத்தை விட வசதியாக இருந்தது, வெளிநாட்டு வாழ்க்கை நந்தினிக்கு கனவு, இவையெல்லாம் நந்தினி கணக்கு போட்டு பார்த்தபின் சந்தோஷை விட்டு மெதுவாக விலக தீர்மானித்தாள்.

 அவள் அப்பாவிடம் தான் செய்த காதலை சொல்லி, அதற்க்கு பின் திட்டமிட்டு நடந்தவைதான் மேற்சொன்ன நாடகங்கள். ஆஸ்திரேலிய மாப்பிள்ளை நவீன் பெண் பார்க்க வந்தான், இவளை மிகவும் பிடித்துவிட அடுத்த முகூர்த்ததில் திருமணம் நிச்சயம் ஆனது. நந்தினி வெளிநாட்டு கனவில் மிதக்க ஆரம்பித்தாள்.


பெற்றோர்களின் வற்புறுத்தல் தாங்க இயலாமல், திருமணத்திற்கு சம்மதித்தான் சந்தோஷ். உறவினர் பெண் ரேஸ்மிதான் மனைவி.

நந்தினிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அதே நாளில் சந்தோஷிற்கும் திருமணம்.

ட்விஸ்ட்.
 திருமணத்திற்கு சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் நவீன் தனது வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு நந்தினி இருக்கும் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தான். வெளிநாட்டு வாழ்க்கை வீண் எனவும், சம்பளம் குறைவாக இருந்தாலும் இதுதான் நிம்மதி எனவும் பெரிய தத்துவத்தை பதிலாக தந்ததும் நந்தினி ஏனோ மயங்கி விழுந்தாள்.

ரேஸ்மியின் சகோதரன் ஆஸ்திரேலியாவில் இருந்து நவீன் என்பவர் தனது அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்து போவதாகவும், சந்தோஷ் விரும்பினால் அதே வேலையை சற்று கூடுதல் சம்பளத்துடன் வாங்கி தருவதாகவும் சொன்னதால், நந்தினியின் நினைவில் இருந்து முழுதும் விடுபடவும், ரேஸ்மியுடனான புது வாழ்க்கையை தொடங்கவும் சம்மதித்தான் சந்தோஷ்.

நவீன் இப்போது நிரப்ப போவது சந்தோஷ் இருந்த இடத்தை, அலுவலகத்தில் கூட....

கடவுள் இருக்கான்ல?

அலுவலகத்தில் நடந்த உண்மை கதைதான், பெயரும் சிறு சம்பவங்கள் மட்டுமே சுவாரஸ்யத்திற்க்காக சேர்க்கப்பட்டிருக்கின்றன.





  

No comments:

Post a Comment