Tuesday, March 8, 2016

மகளிர் தினம்

திரு ராஜா., காங்கிரஸில் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு சாதரண குடும்பத்தில் பிறந்து மக்களுக்காக போராடும் இளைஞர்.என் ட்விட்டர் நண்பன்... 
அவரின் மகளிர் தின கட்டுரை   

ஆணும்,பெண்ணும் சமம் என்பதே பகுத்தறிவு.
உடல் ரீதியாக ஆண் என்பவன் பெண்ணை விட சற்று வலிமையானாக இருந்தாலும், மனரீதியாக பெண் பெரும் வலிமை மிக்கவள்.
ஆண் அறிவியல் ரீதியாகவே ஒரு பெண்ணை
தாய்,சகோதரி,தோழி,காதலி,மனைவி என சார்ந்து வாழும் குணம் உடையவன்.
பெண் தன் பிரியங்களை வெளிக்காட்டும் தன்மை கொண்டவள்.
தன்னை சுற்றியுள்ளவர்களை காப்பதும்அவர்களை வாழவைப்பதும் அவளின் இயல்பு.
ஆணின் வெற்றிக்குபின் பெண்ணும், பெண்ணின் வெற்றிக்கு பின் ஆணும் 
இருப்பது அதிசயமல்ல, இயல்பு.
பெண்ணில்லாமல் ஆண் இல்லை, ஆண் இல்லாமல் பெண் இல்லை என்பது அடிப்படி விஞ்ஞானம்.
அறியாமையாமல் அடிமைபட்டுக்கிடந்த பெண் சமூகம் தற்பொழுது ஒவ்வொரு அடியாக தலைதூக்க தொடங்கியுள்ளது.
ஆணுக்கு இணையாக பெண்கள்
போட்டியிடும் அளவிற்கு அவர்கள் வளர்ந்து வருகிறார்.
அவர்களை நாம் கரம்பிடித்து தூக்கிவிட வேண்டும்.
சகபோட்டியாளராக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது.
தமிழ் சமூகத்தை பொருத்தளவில் பெண்கள் காட்சி பொருளல்ல. காவிய பெண்மணிகள்.
அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பெண்களின் திறமைகள் மதிக்கப்படவேண்டும்.
பாலியல் ரீதியாக மட்டுமே பெண்களை பார்பதை தவித்து,பெண்ணையும் தன்னைபோலவே மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
தனக்கு முன்னே செல்லும் பெண் சமூகத்தின் மீதான சீண்டல்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட மிருகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் கடமையும்கூட.
பெண்கள் சாதிக்கட்டும்
புதியதோர் சரித்திரம் படைக்கட்டும்.
நாம் ரசிக்க கற்றுக் கொள்வோம் பெண்களின் வெற்றியை...

#மகளிர்_தின_வாழ்த்துக்கள்

இவரை ட்விட்டரில் தொடர ராஜா ராக்கெட்

No comments:

Post a Comment