Tuesday, February 23, 2016

யானை டாக்டர் கதை பற்றி

ஜெயமோகன் எழுதிய "அறம்" சிறுகதை தொகுப்பில் உள்ள "யானை டாக்டர்" எனும் கதை பற்றிய சிறு பார்வை

காடு சார்ந்த வாழ்க்கை பற்றி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் யானை டாக்டரை ஒரு முறை வாசிக்க வேண்டும்.

டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி என்பவரை பற்றி எழுதப்பட்ட உண்மை கதை தான் இது. ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. யானைகளையும், புழுக்களையும் ஒரு குழந்தை போல் இவரால் கையாள முடிகிறது, எதற்கும் ஆசைபடாத, மிருகங்கள் பால் பேரன்பு கொண்டு அவைகளின் இன்னல்களை தீர்க்க போராடிய ஒரு மனித நேயத்தின் தளபதி அவர். யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல்துறையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொருவடிவமே காசிரங்கா காண்டாமிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார்கள்

அந்த நல்ல மனிதருக்கு காலம் கடந்தாவது, ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்து விட வேண்டும் என ஜெயமோகன் செய்திருப்பது உண்மையில் மிகுந்த பாராட்டுக்கு உரியது.
 ஒருமுறை ஜெமோவை படிக்க தொடங்கி விட்டால், அவர் நம்மை வேறொரு காட்சி பரப்புக்கு கடத்தி கொண்டு போய் விடுகிறார் 
அவரது வரிகள் சில

வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம். அதைமாதிரி தியானம் ஒண்ணும் கெடையாது. நாம யாரு, நம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும். வலின்னா என்ன? சாதாரணமா நாம இருக்கறத விட கொஞ்சம் வேறமாதிரி இருக்கற நிலைமை. ஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்னு நம்ம மனசு போட்டு துடிக்குதுஅதான் வலியிலே இருக்கற சிக்கலே….பாதி வலி வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும்வெல், டெஃபனிட்லி கடுமையான வலிகள் இருக்கு. மனுஷன் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. ஹி இஸ் ஜஸ்ட் அனதர் அனிமல்னு காட்டுறது அந்த மாதிரி வலிதான்…’

"சரிதான் தூங்கு என்று சொன்னது மூளை. எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு."
   
"என் உடலின் எல்லா செல்களும் நுரையின் குமிழிகள் போல உடைந்து நான் சுருங்கிச் சுருங்கி இல்லாமலாவது போல உணர்ந்தேன்"

"நிறைந்த மனதின் எடையை உடலில் உணர்வது அப்போதுதான் முதல் முறை"

 அறம் சிறுகதை தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் சிறந்தவையே. இவை புத்தகங்களாக இணையத்தில் விற்பனையாகிறது. உங்கள் வாசிப்பின் திறனை நிச்சயம் ஜெமோ அதிகரித்து விடுவார். நீங்கள் படிக்கவும் பரிசளிக்கவும் மிக நல்ல புத்தகம் அது என்பதில் சந்தேகம் இல்லை.

அதற்கு சுத்தமாக நேரம் இல்லை என்பவர்களுக்காக ஜெயமோகன் தனது வலை பக்கத்திலும் இந்த சிறுகதையை வெளியிட்டிருக்கிறார்.


  மனித நேயத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் எனில் இதை காசு கொடுத்து வாங்கி படியுங்கள்

No comments:

Post a Comment