Wednesday, February 10, 2016

ரசித்த கவிதைகள்

"தேர்தல்" 

தேர்தலெனும்
ஆர்ப்பாட்டமான டெஸ்ட்டில்
அம்பயர்களாக நின்ற
அப்பாவி மக்களே-எப்போதும்
அவுட் ஆகிறார்கள்..!
-------------------------------------

பரத்தமை

நாங்கள் பொருட்பாலுக்காக
காமத்துப் பாலை விற்கிறோம்
அதற்காக
அறத்துப்பால் ஏன்
அழுதுவடிகிறது..
-------------------------------------- 
சுதந்திரம்

இரவில் வாங்கினோம்
விடியவே இல்லை..என
புதுக்கவிதை சொல்லி
புலம்பித் திரிகிறார்கள்
பாரதம் முழுவதும்
ஊழல்மன்னர்கள்
பரவிக்கிடக்கையில்
பகலில் வாங்கியிருந்தால் மட்டும்
விடிந்துவிடவா போகிறது..?”..
---------------------------------------------- 
சுதந்திரம்

பட்டுவேட்டியைப் பற்றிக்
கனாக் கண்டு
கொண்டிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது..!

களவாடப்பட்டது கோவணம்
கனவிலென்னவோ
பட்டு வேட்டி..
 ---------------------------------------

No comments:

Post a Comment