Friday, January 22, 2016

வலைபாயுதே



ரசித்த சில ட்விட்கள்

டுபாக்கூர் ஏஜெண்டுகிட்ட சிக்கி துபாய்க்குப் போகமுடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்குப் போய்ட்டு வந்த வடிவேலுவை ஓட்டுறதுதான் Irony! :)

@kiramaththan

ஓட்டே போடாம அரசியல் பத்தி பேசுறது.
படமே பாக்காம பட விமர்சனம் செய்றது.
வயலே பாக்காம விவசாயம் பத்தி பேசுறது
யாருங்க நீங்க - டிவிட்டர் பிரபலம்
@DinuVj

ஈகோவைத்தான் நிறைய பேரு கெத்துன்னு நினச்சுக்கிட்டிருக்காங்க
@SelvaaRocky

தி.மு.க என்பது நமக்கு தெரியாதிருக்க பினாமி வைத்து தெளிவாய் திருடுவது, அதிமுக என்பது நமக்குத் தெரிந்தால் என்ன என்று திமிராய் திருடுவது.
@moon_inthewell

குழந்தைகளின் கோபமும் சண்டையும் அடுத்த விளையாட்டு ஆரம்பிக்கும் வரை தான்!ஆனால்
பெரியவர்களின் சண்டை தான்
அடுத்த தலைமுறைகள்  வரை நீடிக்கிறது!!
@ponkulanthai

எல்லோருடைய வாழ்க்கை புத்தகத்திலும் கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது...!!!
@shefnatwits

TR : என் புள்ள சட்டைல சின்ன கரை பட்டாலும் உன்ன செதச்சிடுவேன்

பாண்டவர் அணி : அப்ப அவன் சட்டைய கழட்டிட்டு அடிங்கடா
@MrElani

இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும் பொழுது
கடைசி நொடியில் பிறக்கும் துணிவுதான் மீண்டும் வாழ்வை
வாழச் சொல்கிறது.!
@dhivya_iam

நாரதனால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது..
அதனால்தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார்
@Shalinii_

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி , நான் செய்த எந்த தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !
@Kathirru

விருப்பமில்லாதவர்களை சுமக்காதீர்கள், உயிரற்ற உடல் போல் கனப்பார்கள்.
@tejomayan

இட்லி தோசை பொங்கல் உப்புமா கிச்சடி எனும் பஞ்சபாண்டவர்களுக்கென படைக்கப்பட்ட திரெளபதி தேங்காய்சட்னி
@mpgiri

"மயிராப்போச்சு போ" என்ற மனநிலைக்கு வந்தவுடன் பிரச்சனையை அணுகுவது சுலபமாயிருக்கிறது.
@svenkad

ஒரு மழலை செமயா அழுதுட்டே வந்து வாசப்படி ஏறும்போது கவனமா அழுகை நிறுத்திட்டு கை ஊனி விழாம ஏறி திரும்ப அழுகைய தொடருது :-)
@arattaigirl

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்.
@nmravikumar

நிறைய நேரமும் குறைவாகப் பணமும் செலவழித்து வளர்க்கப்படும்  குழந்தைகள் வீணாகப் போவதில்லை...
@mekalapugazh

இப்போதாவது புரியுமா. பணமோ, அழகோ, சாதியோ, மதமோ எதுவுமில்லை. வாழ்ந்த விதம் மட்டுமே ஒருவருக்கு பெருமை சேர்க்கும்.
@r_vichu  

No comments:

Post a Comment