Tuesday, January 12, 2016

காதல்

எனக்கு பிடித்ததை அவளும்
அவளுக்கு பிடித்ததை
நானும் பேசிக்கொண்டிருந்தோம்,
பிடிக்காதவைகளையும் பேசி இருந்திருக்கலாம்
பிரிய நேர்ந்திருக்காது...


 அவள் என் காதலியாகி
மனைவியாகி விட்ட பிறகு,
"உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்"
என கடவுளை பார்த்துக்கூட
கேட்டு விடக்கூடும் நான்
-------------------------

 உன்னை விட அழகானது உன் கோபம்,
 என்னை விட பரிதாபமானது என் காதல்
#தபு
-------------------------


 "சுவாதிநட்சத்திரத்தில் பிறந்தவள் நான்" என்றாள்,
நிலவில் பிறந்தவள் என்று நினைத்திருந்தேன்,
அதைதாண்டி
நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறாள் போலும்
-------------------------

 நீ பேசு இல்லை
உன் அழகு பேசட்டும்
-இருவரும் பேசினால்
நான் எதை கேட்பது

-------------------------

No comments:

Post a Comment